Spread the love

புதுடெல்லி செப், 23

முன்னாள் இந்திய ஆக்கி அணியின் கேப்டன் திலீப் டிர்க்கி இந்திய ஆக்கி தலைவர் பதவிக்கு இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட உத்தரபிரதேச ஆக்கி தலைவரான ராகேஷ் கத்யால் மற்றும் ஜார்கண்ட் ஆக்கி தலைவர் போலாநாத் சிங் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதையடுத்து திலீப் இந்திய ஆக்கியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் கடந்த 18 ம் தேதி மனு தாக்கல் செய்து இருந்தார். வெற்றி பெற்றதை தொடர்ந்து திலீப் டிர்க்கி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்திய ஆக்கி புதிய உயரங்களை எட்டுவதை உறுதி செய்வேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *