Spread the love

கள்ளக்குறிச்சி செப், 17

மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் காவலர் பல்பொருள் அங்காடியை தமிழக காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் நடந்த காவலர் பல்பொருள் அங்காடி திறப்பு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்லால், துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், பாலசுப்பிரமணியன், ரவிச்சந்திரன், சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, காவல் ஆய்வாளர்கள் இளங்கோவன், குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *