Spread the love

நாமக்கல் ஆகஸ்ட், 1

நாமக்கல் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது மற்றும் வாகன பராமரிப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. இதில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இரவு நேரம், மழைக்காலங்களில் நோயாளிகளை ஏற்றி கொண்டு செல்லும்போதும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் சாலை விதிகளை கடைபிடித்து வாகனங்களை எவ்வாறு பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்பது பற்றியும், வாகனங்களை முறையாக பராமரிப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் 108 ஆம்புலன்ஸ் மண்டல மேலாளர் குமரன், நாமக்கல் மாவட்ட மேலாளர் கணேசன், சேலம் மாவட்ட மேலாளர் அம்பிகேஷன், வாகன பராமரிப்பு மேலாளர் மணிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி முகாமில் ஏராளமான ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

#Vanakambharatham #Namakal #108 #news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *