Spread the love

தஞ்சாவூர் செப், 12

பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ரயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. காலையிலிருந்து ரயில்வே கேட் மூடப்பட்டு மாலை வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பழைய தண்டவாளத்தை அகற்றிவிட்டு புதிய தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றது.

இந்த ரயில்வே சாலை வழியாக 10-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், 7-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களும் சென்று வருகிறது. ரயில்வே இளநிலை பொறியாளர்கள் பங்கஜ் பாண்டே, பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் ரயில்வே தொழிலாளர்கள் புதிய தண்டவாள புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர். கோபுராஜபுரம் ரயில்வே கேட் மூடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் அனைத்து வாகனங்களும் பெருமாங்குடி வழியாக மாற்றி விடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *