Spread the love

கோயம்புத்தூர் செப், 11

பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளியில் தென்னிந்திய அளவிலான கண் பார்வையற்றோருக்கான செஸ் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 120 பேர் கலந்துகொண்டனர். போட்டிகள் 8 சுற்றுக்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் நாள் 4 சுற்றுக்கள் நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள், சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்படுகிறது. இன்று மாலை பரிசளிப்பு விழா நடக்கிறது. இதற்கிடையில் இன்று 48 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளும் செஸ் போட்டி நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *