மதுரை ஜூலை, 25
உடல்நலக்குறைவால் மறைந்த அரவிந்த் கண் மருத்துவக் குழுமத்தின் Ex தலைவர் Dr.நம்பெருமாள்சாமி உடலுக்கு அரசு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். மதுரை அண்ணாநகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல் இன்று மாலை 4 மணிக்கு சொந்த ஊரான தேனி, அம்பாசமுத்திரத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்யப்பட்டது.