டாஸ்மாக் சோதனை வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளிக்க உள்ளது. ED சோதனையில் ₹1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இன்று தீர்ப்பளிக்க உள்ளனர். விசாரணையை தொடர ED-க்கு அனுமதி அளிக்கப்பட்டால் டாஸ்மாக் துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிக்கல் எழும்.