சட்டமன்றத்தில் இன்று ‘மாநில சுயாட்சி’ தொடர்பான தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிகிறார். நீட், மொழி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய பாஜக அரசு, தமிழகத்திற்கு அநீதி இழைத்து வருவதாக திமுக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வலியுறுத்தும் வகையில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.