கீழக்கரை ஜன, 30
ராமநாதபுரம் தமிழ் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளுவர் தின விழா பேச்சுப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் கலந்து கொண்ட கீழக்கரை இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி ஜூவைரியா பாத்திமா இரண்டாம் பரிசும், 10ஆம் வகுப்பு மாணவி ஹமீது ரைஹானா மூன்றாம் பரிசும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகீம் தலைமையாசிரியர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பாராட்டினர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.