சிவகங்கை ஜூலை, 2
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் பத்தாம் கட்ட அகழாய்வு பணியில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட இரண்டு பானை ஓடுகள் கிடைக்கப்பட்டுள்ளன. இவை 58 சென்டிமீட்டர் மற்றும் 96 சென்டிமீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேற்புறம் சிவப்பு வண்ண பூச்சூடன் இருந்த இந்த ஓடுகள் 4×5 சென்டிமீட்டர் நீளம், 4×3 சென்டிமீட்டர் அகலத்தில் இருந்ததாக தெரிகிறது. முன்னதாக கடலூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் ராஜராஜ சோழர் காலத்து நாணயம் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.