Spread the love

ராமநாதபுரம் ஜூன், 18

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரத்திலிருந்து கடலுக்கு சென்ற அவர்களின் படகையும் பறிமுதல் செய்த கடற்பறையினர், விசாரணைக்காக அவர்களை காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து வாழ்வாதாரம் தேடி மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில் கைது சம்பவம் மீண்டும் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *