புதுடெல்லி மே, 21
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு மாற்றி உள்ளது. இதுவரை லைசன்ஸ் வாங்க வேண்டும் என்றால் ஆர்டிஓ அலுவலகம் சென்று ஓட்டுனர் சோதனையில் பங்கேற்க வேண்டும் இனி அதற்கு எந்த தேவையும் இல்லை. தனியார் நிறுவனங்களுக்கு ஓட்டுனர் சோதனை நடத்தவும், ஓட்டுனர் சான்றிதழ் வழங்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.