திருவண்ணாமலை அக், 22
திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 600 நவீன அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதற்காக நேற்று மாலை திருவண்ணாமலை சென்ற முதல்வருக்கு அமைச்சர் ஏ.வ.வேலு வரவேற்பு அளித்தார். மருத்துவ கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கும் முதல்வர் இன்று மலப்பாம்பாடி கிராமத்திலும் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.