அரியலூர் மார்ச், 21
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் துணை ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர் கோரைக்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, கோரைக்குழி நடுத்தெருவை சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டின் பின்புறம் இருந்து விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து மோகன்தாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.