கோயம்புத்தூர் ஜன, 3
நெகமம் கிணத்துக்கடவு ஒன்றியம், பனப்பட்டி கிராமத்தில் பனப்பட்டி கால்நடை மருத்துவ மையத்தின் சார்பில் கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோயை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு கால்நடை மருத்துவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார், முகாமில் பனப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் சுமார் 150-க்கும் மேற்பட்ட கால்நடைகளை கொண்டு வந்தனர்.