Spread the love

கொல்லிமலை ஆகஸ்ட், 10

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் நேற்று நடந்த உலக பழங்குடியினர் தின விழாவில் 250 நபர்களுக்கு ரூ.2.38 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

இவ்விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி, பழங்குடியினர் நல இயக்குனர் அண்ணாத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 3 பேருக்கு தையல் எந்திரங்களையும், 25 பேருக்கு ஓட்டுனர் உரிமத்தையும், 60 பேருக்கு பழங்குடியினர் நல அட்டைகளையும், தாட்கோ திட்டத்துறையின் சார்பில் 40 பேருக்கு ரூ.1 கோடியே 28 லட்சம் கடன் உதவிகள் உள்பட மொத்தம் ரூ.2 கோடியே 38 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *