Spread the love

திருவண்ணாமலை டிச, 26

திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணிதிட்ட சிறப்புமுகாம் தொடங்கியது.

பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக் குமாரி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் வெங்கடேசன், தட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் தாமோதரன் வரவேற்றார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம் முகாமை தொடங்கி வைத்து தூய்மைப்படுத்தும் பணிக்கான உபகரணங்கள், சீருடைகள் வழங்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சண்முகம், ஆசிரியர் சங்க செயலாளர் ஜான்வெலிங்டன், ஆசிரியர்கள் கு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் முதுகலை ஆசிரியர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *