Spread the love

நாகர்கோவில் ஆகஸ்ட், 10

குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக தஞ்சாவூரில் இருந்து 1,350 டன் ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த அரிசி மூடைகள் சரக்கு ரெயில் மூலம் நேற்று நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் ரயில் பெட்டிகளில் இருந்து அரிசி மூடைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, அரசின் உணவு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *