Spread the love

கொச்சி ஆகஸ்ட், 7

கொச்சி கப்பல் கட்டும் தளம், கடற்படைக்காக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை கட்டி முடித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த போர்க்கப்பலை இந்திய கடற்படையிடம் கொச்சி கப்பல் கட்டும் தளம் வழங்கி உள்ளது. இந்த கப்பல் அடுத்த மாதம் முறைப்படி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, இந்திய கடற்படையில் சேர்க்கப்படுகிறது. அப்போது இந்த கப்பல், ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற பெயரைப் பெறும்.

இந்த நிலையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி ஐ.என்.எஸ். ‘விக்ராந்த்’ போர்க்கப்பலை நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்.

மேலும் கேரளாவில் உள்ள கொச்சி கப்பல் கட்டும் தளத்துக்கு வந்த அவர், கடற்படை வீரர்களுடன் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலை சுற்றி பார்த்தார். அதன் பின்னர் கடற்படை வீரர்கள் அங்கு பணியாற்றி கொண்டிருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்களுடன் நடிகர் மோகன்லால் கலந்துரையாடினார்.

அதன் பின்னர், இந்திய கடற்படையை மேலும் பலப்படுத்தும் நோக்கில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கப்பல் வெற்றியடைய வாழ்த்துக்கள் எனவும் தனது முகநூல் பக்கத்தில் மோகன்லால் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *