Spread the love

துபாய் மார்ச், 1

ஐக்கிய அரபு அமீரக துபாய் தேரா கிளாக் டவர் அருகே செயல்படும் தமிழ் உணவகமான ஈரோடு அம்மன் மெஸ் உணவகத்தின் முதலாம் ஆண்டு விழா கேஆர்ஜி குரூப் நிறுவனத்தின் நிறுவனர் கண்ணன் ரவி, பிளாக் துளிப் சாதிக் மற்றும் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் லக்ஷ்மணன் தலைமையில் ஈரோடு அம்மன் மெஸ் உணவகத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கட் முன்னிலையில் சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்த உணவகத்தை பற்றி அதன் நிர்வாக இயக்குனர் வெங்கட் கூறுகையில் ஈரோடு அம்மன் மெஸ் உணவகம் அனைத்துத்தரப்பு மக்களும் குடும்பத்துடன் சேர்ந்து உணவருந்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டதாகும் என்றும் நாங்கள் பரிமாறும் உணவு பாரம்பரியம் மாறாமல் ஊர் சுவையுடன் சொந்த வீட்டில் குடும்பத்துடன் சென்று உணவருந்தும் உணர்வைத்தரும் என்றும் கூறினார். மேலும் அவர் கூறும்போது தங்கள் உணவகத்தின் வெற்றிக்கு வாடியாளர்களும் அவர்களுக்கு அன்பாக உபசரிக்கும் எங்கள் உணவகத்தின் ஊழியர்களும் முக்கிய காரணம் என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக , பிளாக் துளிப் யஹியா, அலைட் மோட்டார்ஸ் நிறுவனர் கமால், ரெடியண்ட் ஸ்டார் நிறுவனர் ஆபீத் ஜுனைத், துபாய் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், கேப்டன் டிவி வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், எழுத்தாளர் குழுமம் நிர்வாகி ஆசிப் மீரான், Spread Smiles மக்கள் ஆர்ஜே சாரா, டோக்கியோ தமிழ் சங்கம் தலைவர் ஹரி, பேச்சாளர் ஸ்ரீகுமார், யூடூபர் பிரியா சரவணன், தனியார் பத்திரிக்கை மேலாளர் ராம், தினகுரல் நாளிதழ் வளைகுடா தலைமை நிருபரும் வணக்கம் பாரதம் வார இதழின் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா, TAM நிறுவனர் ஷாநவாஸ், மற்றும் ஊடக பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவு உபசரித்து நிர்வாக இயக்குனர் வெங்கட் நன்றிகளை தெரிவித்தார்.

M.நஜீம் மரைக்கா B.A.,

இணை ஆசிரியர்.

அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *