நாமக்கல் அக், 5
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நாமக்கல் மாவட்ட மீட்பு பணி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, உதவி ஆட்சியர்கள் மஞ்சுளா, கவுசல்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிவசுப்பிரமணியன், உதவி இயக்குனர் கலையரசு உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.