நாமக்கல் செப், 17
நாமக்கல் கமலாலய குளத்தில் ரப்பர் படகு மூலம் காவல் துறையினருக்கு வெள்ள மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு கமண்டோ பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர். மேலும் மாவட்ட ஆயுதப்படை காவல் துறையினர் 60 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். அப்போது முதலுதவி சிகிச்சை அளிப்பது, ரப்பர் படகை கையாளுவது, மரம் அறுக்கும் எந்திரங்களை கையாள்வது, வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.