Spread the love

துபாய் மே, 22

ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் உள்ள சஹாரா மஹாலில் செயல்பட்டு வரும் பிஎஸ்எம் ஹெச்கே இன்வெஸ்ட்மென்ட் குழும நிறுவனங்களின் ஒன்றான அல் பிர்தௌஸ் பெர்ஃபியம் தனது புதிய படைப்புகளான ஸியாத், ரௌலா, ரஜாத், இஸ்சா ஆகிய அதிக நேரம் வாசனை வீச கூடிய புதிய வகை வாசனை திரவியங்களை அறிமுகம் செய்தது.

மேலும் அன்னையர் தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களின் ஆதரவோடு பிஎஸ்எம் ஹெச்கே இன்வெஸ்ட்மென்ட் குழும நிறுவனங்களின் நிறுவனர் பிஎஸ்எம் ஹபிபுல்லா கான் மற்றும் நிர்வாக இயக்குனர் முஹம்மது அலி ஆகியோர் வாழ்த்துக்களோடு நிறுவனத்தின் மேலாளர் முகத்திம் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக மக்கள் ஆர்ஜே சாரா கலந்துகொண்டு வாசனை திரவியங்களை அறிமுகம் செய்தார்.

இவ்வாசனை திரவியம் அறிமுக சலுகையாக அன்னையர் தினத்தை கொண்டாடும் விதமாக அம்மாவோடு வரும் வடிக்கையாளர்களுக்கு சிறப்புசலுகைகள் வழங்கப்பட்டுவருவதும் மேலும் இந்த சலுகை துபாய் அபுஹைல் சென்டரில் செயல்பட்டு வரும் கடையிலும் பொருந்தும் என மேலாளர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

M.நஜீம் மரைக்கா B.A.,

இணை ஆசிரியர்.

அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *