கீழக்கரை ஆகஸ்ட், 15
ராமநாதபுரம் மாவட்ட, கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் சார்பில் பள்ளிவாசலில் தேசிய கொடி ஏற்றப்பட்டு இந்திய சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் ஜமாத் நிர்வாகிகள், தலைவர், செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கொடி ஏற்றியவுடன் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஜமாத் செயலாளர் செய்யது இப்ராஹீம் நன்றியுரை கூறி சுதந்திர தின விழா இனிதே நிறைவடைந்தது.