மதுரை ஆகஸ்ட், 13
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கடைசி ஆடிவெள்ளியன்று உலக நலன் வேண்டியும், விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டியும் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்று வந்தது.
மேலும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த 2 ஆண்டுகள் 1008 திருவிளக்கு பூஜை நடைபெறவில்லை. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கடைசி ஆடிவெள்ளியான நேற்று உலக நன்மைக்காக 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.