Spread the love

பெரம்பலூர் டிச, 14

பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கும், மருதடியில் உள்ள ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கும் தலா ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த கட்டிடங்களின் கட்டுமான பணிகளை தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிாியா, சட்ட மன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோருடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையின் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *