இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாகவும், அவர் மீண்டும் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் தினமாகவும் கடைப்பிடிக்கிறோம். புனித வெள்ளியில் (Good Friday) இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவைச் சாவையும் நினைவுகூர்கிறோம். பகைவர்களை நேசிக்க சொன்ன இயேசு கிறிஸ்து, மனித குலத்தின் பாவங்களை மன்னிப்பதற்காக சிலுவையில் அறையப்பட்டார்.